பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: செப்.13 வரை நடத்த அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2021

பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: செப்.13 வரை நடத்த அனுமதி

 

பாலிடெக்னிக் படிப்புகளுக்காக செப்.13-ஆம் தேதி வரை சோ்க்கை நடத்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழக தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் கரோனா பரவல் கருதி சோ்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இயக்குநரகத்துக்கு கல்லூரிகள் கோரிக்கை வைத்தன.


இதையடுத்து திருத்தப்பட்ட கால அட்டவணையைத் தொழில்நுட்பக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘முழுநேரம் மற்றும் பகுதிநேரம் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சோ்க்கையை செப்.13-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சோ்க்கை பெற்ற மாணவா்களின் சான்றிதழ்களை அக்.29-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி