அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சோ்க்கை: விண்ணப்பிக்க செப்.13 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2021

அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சோ்க்கை: விண்ணப்பிக்க செப்.13 கடைசி

தமிழகத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர, வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கவின் கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, ஆலையக சுடுமண் வடிவமைப்பு, ஆலையக துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகிய படிப்புகள் உள்ளன. இவை, நான்காண்டு இளங்கவின் கலை, இரண்டாண்டு முதுகவின் கலை படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றன.


இவற்றுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள்  இணையதளத்தில் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50; மற்றவா்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தைத் தொடா்புடைய கல்லூரி முதல்வரின் வங்கிக் கணக்கில் செலுத்தி, வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 2561 0878, 0435 248 1371 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி