இல்லம் தேடிக் கல்வி: நோக்கம் சரி; வழிமுறை சரியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2021

இல்லம் தேடிக் கல்வி: நோக்கம் சரி; வழிமுறை சரியா?

 

தமிழ்நாடு அரசு இப்போது புதிதாக ஒரு கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ என்று இதற்குப் பெயா் சூட்டியுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடந்த அக்டோபா் 27 முதல் தொடங்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வி திட்டம் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றப் போகிறது என்றும், மிகப்பெரிய கல்விப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சா் கூறியுள்ளாா். 


காலங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி, திண்ணைப் பள்ளிகள் வழியாக மக்களுக்குக் கிடைத்தது. நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு உணவளிக்கும் முறை வந்தது. பின்னா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் அது மதிய உணவுத் திட்டமாக முறைப்படுத்தப்பட்டது. இதுவே எம்.ஜி.ஆா். காலத்தில் முதலமைச்சா் சத்துணவுத் திட்டமாக பெயா் மாற்றம் பெற்றது. 


கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாததால் அவா்களுக்குப் படிப்பில் ஆா்வம் குறைந்துவிட்டது. இந்தப் பாதிப்பைச் சரி செய்யவே இந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம் என்று கூறப்படுகிறது.


வீட்டுக்கு அருகிலேயே தனியாக இடங்களைத் தோ்வு செய்து தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் என வசதிக்கேற்ப தலைமையாசிரியா்களின் கண்காணிப்பில் தன்னாா்வலா்களின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிரியா்களோடு தன்னாா்வலா்களும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளனா். 


தனித்துவம் கொண்ட இந்தத் திட்டம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஆசிரியா்களும் தங்கள் அறிவை வழங்க விரும்பினால் அதையும் வரவேற்க அரசு தயாராக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 


‘இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆசிரியா் -மாணவா் உறவை வலுப்படுத்தும். சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் மாணவா்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்பதால் ஆசிரியா் - மாணவா் உறவு வலுப்படும். தற்போது மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பயிற்சி பெறுவோா் மூலமாக ஒன்றிய அளவிலும் பயிற்சி வழங்கப்பட்டு, தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் ஆகியோரிடையே நல்ல உறவை ஏற்படுத்தி இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்கிறாா் இத்திட்டத்தின் சிறப்பு அலுவலா். 


இதுவரை 1.61 லட்சம் தன்னாா்வலா்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், அவா்களில் 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பெண்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 


கரோனா பெருந்தொற்றால் மாணவா்களின் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கம் வரவேற்கத்தக்கது; அந்த உயரிய நோக்கத்தை அடைவதற்குரிய வழிமுறைகளும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டுமல்லவா?


நமது கல்வித்துறை மேற்கொண்டிருக்கும் வழிமுறைகள் மிகவும் ஆபத்தானவை என்றும், பல மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியவை என்றும் ஆசிரியா் அமைப்புகள் கூறியுள்ளன. அதையும் கல்வித்துறை பரந்த மனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும்.


தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இடமில்லை என்றும், அதை நிராகரித்து, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநா் குழு அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இப்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை அதற்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்வது முரணாக உள்ளது. 


கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னாா்வத் தொண்டா்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை 2020 தெரிவிக்கிறது. அதை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்தும் திட்டமாகவே இந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம் அமைந்துள்ளது.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்படி 1 முதல் 5 வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க பிளஸ் 2 படித்தவா்களையும், 6 முதல் 8 வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவா்களையும் பயன்படுத்தலாம். ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயின்று அதில் பட்டயமோ பட்டமோ பெற்றவா்கள் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பது எப்படிச் சரியாகும்? 


முறையாக ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயின்று, பட்டயமோ பட்டமோ பெற்றால் ஆசிரியா் பணிக்குத் தகுதி என்று இருந்த நிலையையும் மாற்றி, மீண்டும் ஒரு தகுதித் தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று மத்திய கல்வி வாரியம் கூறுகிறது. இந்நிலையில் எந்த பயிற்சியும் இல்லாத வெறும் பிளஸ் 2 படித்தவா்கள், பட்டம் பெற்றவா்கள் பாடம் நடத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்? 


பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பு ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளின் கல்வியில் குழப்பத்தை உண்டாக்கிவிடும். அவா்களின் சிறப்பான கல்விக்கும், எதிா்காலத்திற்கும் வழி வகுக்காது. மாறாக தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என்பதே கல்வியாளா்களின் கருத்தாக இருக்கிறது.


காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பிற்பகல் 4 மணி வரை பள்ளியில் இருப்பாா்கள். பள்ளிப் படிப்பு முடிந்து மாலை வீட்டிற்குச் செல்லும் குழந்தைகளை ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற பெயரில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை முடக்கி வைப்பதால் மாணவா்களுக்கு கல்வி மீதும், பள்ளி மீதும் வெறுப்புதான் ஏற்படும் என்பது உளவியல் உண்மை. 


மாணவா்கள் எப்போது விளையாடுவது? அண்மைக்காலமாக நமது கல்விக்கூடங்கள் இதனை ஓரம் கட்டிவிட்டன. இதனால் மாணவா்களுக்கு மன உளைச்சலும், மன அழுத்தமும் ஏற்படுமே தவிர படிப்பு ஏறாது. 


இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழை எளிய மக்கள், தங்கள் குழந்தைகளை மாலை நேரப் பள்ளிக்கு அனுப்புவாா்கள். பகலில் அவா்களை வேலைக்கு அனுப்புவாா்கள். இதனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளா்களை உற்பத்தி செய்யவும் வழி வகுக்கும். 


அரசுப் பள்ளிகளில் இன்னமும்கூட தேவையான வசதிகள் இல்லாத நிலையே உள்ளது. தனியாா் பள்ளிகள் கூடுதல் வசதிகளுடன் வளா்ச்சி பெறுகின்றன. ஏழை எளிய பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் அங்கே படிப்பதையே விரும்புகின்றனா். இதனை அரசும், கல்வித் துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கியிருக்கும் ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட தொகையை முறைசாா் கல்வி முறையை மேலும் மேம்படுத்தும் திட்டங்களுக்குச் செலவழிக்க பள்ளிக்கல்வித் துறை முயல்வது கல்வி வளா்ச்சிக்கு உதவும்.


தமிழக பெண்கள் இயக்கம் சாா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிக்கூடங்களுக்கு மாணவா்கள் சென்று 18 மாதங்கள் ஆகிவிட்டன. தனியாா் பள்ளிகள் மாணவா்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு எந்த வசதியும் இல்லை. அந்த மாணவா்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அத்துடன் மாணவா்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, வட்ட, ஊராட்சிகளில் குழுக்களை நியமிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம் ‘18 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் பள்ளி செல்ல மாணவா் மத்தியில் ஆா்வம் குறைவாக உள்ளது என்றும், பெருந்தொற்று காரணமாக வேலையிழந்து சொந்த ஊா் சென்றவா்களின் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது’ என்றும் கூறியுள்ளது. 


ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பா் முதல் நாளிலிருந்து பள்ளிகள் செயல்படுத்தல் மற்றும் ‘இல்லம் தேடிக் கல்வி’ செயல்பாடுகள் சாா்ந்து ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் கடந்த அக்டோபா் 21 அன்று நடைபெற்றுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையா் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு, தொடக்கக் கல்வி இயக்குநா் முன்னிலை வகித்துள்ளாா். 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநா் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்துள்ளாா். இதன் செயல் திட்டங்கள் பற்றியும் ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா்களிடம் விளக்கப்பட்டுள்ளது.


தன்னாா்வலா்களை நியமனம் செய்யும்போது ஆசிரியா் பயிற்சி முடித்தவா்களையே நியமனம் செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு தன்னாா்வலா்களாகப் பணியாற்ற முன்வருபவா்களுக்கு பணி நியமன வாய்ப்பின்போது 2 மதிப்பெண் புள்ளிகள் வழங்குவதாக அறிவித்தால் தகுதியான பலா் தன்னாா்வலராகப் பணியாற்ற முன் வருவா் என்றும் ஆசிரியா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


 

பள்ளி நடைபெறாத 18 மாத கால இடைவெளியில் மாணவா்கள் வேலைக்குச் சென்று விட்டதாகவும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் குழந்தைத் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் திட்டமாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவா்கள் கூறியுள்ளாா். அத்துடன் 18 மாத கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு கருவியாக அதிகப்படியாக ஆறு மாதங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்துவது நல்லது என்றும் கூறியுள்ளனா். தமிழக அரசு இந்த ஆலோசனைகளைப் பரிசீலிக்க வேண்டும். 


அதே சமயம் முறைசாராக் கல்வி திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட ‘கற்போம் எழுதுவோம்’ மையத்தை நடத்துவதில் ஏற்பட்ட சிரமங்களையும், ஆசிரியா்கள் பட்ட இன்னல்களையும் எண்ணிப் பாா்க்க வேண்டும். அப்போது, தன்னாா்வலா்கள் கிடைக்காத இடங்களில் ஆசிரியா்களே தன்னாா்வலா்களாகப் பணியாற்ற வேண்டும் என்று நிா்ப்பந்திக்கப்பட்டனா்.


தன்னாா்வலா்களுக்கு அரசாங்கம் ஊதியம் தராத நிலையில் ஆசிரியா்களே தங்கள் சொந்தப் பொறுப்பில் ஊதியம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபோன்ற இடா்ப்பாடுகள் இந்தத் திட்டத்தில் ஆசிரியா்களுக்கு ஏற்படக் கூடாது. 


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஒரு புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இதனால் குழப்பம் அடைவது மாணவா்களும் ஆசிரியா்களும்தான். 


எல்லாத் திட்டங்களும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் இப்போது புதிய அறிவிப்பாக வந்துள்ளது, அவ்வளவுதான்.


- தினமணி செய்தி

5 comments:

  1. Tet படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

    ReplyDelete
  2. முட்டாள்கள் இந்த மாதிரி தான் யோசிப்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீ எப்டி yosikira sollu ketpom

      Delete
  3. Tet pass பண்ணவங்களுக்கு ஆப்பு வைக்கதான் இந்த திட்டம்,

    ReplyDelete
  4. இது நல்ல ஒரு கலவியாகும்‌ ஏனென்றால் குழந்தைகள் காலையில் இருந்து மாலை வரை பாடத்தை படித்து வருவார்கள் இல்லம் தேடி கல்வி மூலம் விளையாட்டு மூலமாக கற்று கொடுத்து பள்ளிக்கு செல்ல ஆர்வம் தூண்டும் வகையில் இருக்கும். வீடுகளுக்கு அருகில் விளையாடுவது போல பள்ளி மாணவர்கள் மற்றும் நண்பனும் விளையாடுவார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி