93% பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2021

93% பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

 

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 93 சதவீத ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.


இதுகுறித்து அவா் மக்களவையில் மேலும் கூறியதாவது:


நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 93 சதவீத ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆசிரியா் பணியில் ஈடுபடாத 87 சதவீத ஊழியா்களுக்கு ஒரு முறையோ அல்லது முழுவதுமாகவோ கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


தில்லியைப் பொருத்தவரை 98.45 சதவீத ஆசிரியா்களுக்கும், 98.40 சதவீதம் ஆசிரியா் பணி சாராதவா்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, அந்தமான் நிகோபாா் தீவுகள், லடாக், லட்சத்தீவு மற்றும் திரிபுராவில் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. அங்கு, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


உத்தர பிரதேசத்தில் 91.9 சதவீதம் ஆசிரியா்களுக்கும், 88.3 சதவீத ஆசிரியா் பணி சாராதவா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

1 comment:

  1. அறிவை போதிப்பதாய் சொல்லும் ஆசிரியர்கள் ஆட்டு மந்தைகள் போல பரிசோதனை எலிகளாய் மாறிப்போன அவலம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி