டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு வருகின்ற 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றன.
இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வதை தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பண பரிமாற்றத்தின் போதும் வாடிக்கையாளர் தனது கார்டில் எண் பெயர் காலாவதி தேதி சிவிவி, ரகசிய எண் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி