TNPSC தமிழ் பாடத்தேர்வில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2021

TNPSC தமிழ் பாடத்தேர்வில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா?

  



* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938


* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18


* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு


* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்


* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் பிரம்மன்



* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்


* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.


* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை


* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்


* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்


* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6


* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை


* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்


* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்


* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல


* காராளர் என்பவர் - உழவர்


* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்


* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்


* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்


* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்


* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்


* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு


* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது


* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி


* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு


* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்


* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி


* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்


* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்


* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.


* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்


* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்


* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்


* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்


* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி


* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை


* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்


* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை


* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்


* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை


* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை


* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்


* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்


* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்


* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16


* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்


* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்


* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்


* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி


* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்


அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.


* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்


* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்


* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை


* ரசிகமணி - டி.கே.சி


* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி


* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா


* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா


* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி


* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்


* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி


* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்


* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை


* தசாவதானி - செய்குத் தம்பியார்


* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி


* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்


* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி


* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா


* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்


* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்


* உவமைக் கவிஞர் - சுரதா


* கவிக்கோ - அப்துல் ரகுமான்


* உரையாசிரியர் - இளம் பூரணார்


* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை


* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா


* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்


* குறிஞ்சி மோமான் - கபிலர்


* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்


* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு


* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்


* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்


* திருக்குறளார் - வி.முனிசாமி


* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்


* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை


* பேயார் - காரைக்கால் அம்மையார்


* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்


* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.


* மூதறிஞர் - இராஜாஜி


* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை


* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை


* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை


* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை


* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்


* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்


* புதுக்கவிதை தந்தை - பாரதியார்


* சோமசுந்தர பாரதியார் - நாவலர்


* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்


அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்


* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்


* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்


* சீவகசிந்தாமணி - மணநூல்


* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்


* அகநானூறு - நெடுந்தொகை


* பழமொழி - முதுமொழி


* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்


* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்


* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு


* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை


* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்


* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு


* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை


* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை


* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு


* வெற்றிவேற்கை - நறுத்தொகை


* மூதுரை - வாக்குண்டாம்


* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்


* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்


* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்


* நீலகேசி – நீலகேசித்தெருட்டு


தமிழ் வினாக்கள்


* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18


* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை


* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.


* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.


* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.


* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை


* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்


* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்


* வைக்கம் வீரர் -பெரியார்


* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.


* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்


* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு


* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்


* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி


* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்


* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்


* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்


* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி


* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்


* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்


* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை


* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு


* வசை என்ற சொல்லின் பொருள் - பழி


* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்


* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி


* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்


* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்


* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்


* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்


* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை


* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை


* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்


* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்


* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா


* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்


* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு


* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்


* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)


* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை


* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்


* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)


* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க


* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.


* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்


* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்


* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்


* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்


* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக


* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்


* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்


* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்


* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை


* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை


* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்


* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)


* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்


* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்


* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து


* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்


* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்


* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி


* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்


* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி


* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு


* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி


* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்


* குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்


* பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.


* திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்


* சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்


* அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்


* செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்


* சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது


* காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை


* ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது


* இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது


* புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்


* அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்


* முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்


* மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை


* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா


* "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்


* "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி


* "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்


* திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்


* பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்


* கருடாம்சம் - பெரியாழ்வார்


* சுதர்சனம் - திருமழிசை


* களங்கம் - திருமங்கையாழ்வார்


* காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்


* நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து


* அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்


* காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி


* அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்


* சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்


* பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு


* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.


* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்


* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்


* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்


* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி


* பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.


* மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை


* முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.


* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை


* உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா


* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா


* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்


* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்


* திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்


* கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்


* தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி


* கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்


* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்


* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்


* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்


* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்


* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை


* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.


* "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.


* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்


* தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ


* மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்


* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை


* சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.


* சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி