பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பாதகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2022

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பாதகம்!

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 25154/அ1/இ2/2021 நாள் 30.12.2021 ன் படி தொடக்கக் கல்வியில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட்டு 24/01/2022 ஒன்றியத்திற்குள் பணி நிரவல் தொடர்ந்து ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் தொடர்ந்து 25/01/2022 வருவாய் மாவட்டத்திற்குள் பணி நிரவல்ஸசெய்யப்பட்ட பின்னர் ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வும் அதன் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தொடக்கக் கல்வியை பொருத்தவரையில் பதவி உயர்வு முன்னுரிமை ஒன்றியத்திற்கு உள்ளாக  நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதலும் பதவி உயர்வும் வழங்கப்பட்ட பின்னரே பணிநிரவல் மேற்கொள்வது இன்றியமையாததாகும் ஏனெனில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் எதிர்காலத்தில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.


எனவே ஒன்றியத்திற்கு உள்ளாக முன்னுரிமை நிர்ணயிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு பணியிடங்கள் பணிநிரவலில் நடக்கக்கூடாது. அவற்றையும் பதவி உயர்வில் நிரப்பப்பட வேண்டும் அவ்வாறு நிரப்பப்படாத பட்சத்தில் வேண்டுமானால் தகுந்த ஆட்கள் ஒன்றியத்தில் கிடைக்கப்பெறாத சூழலில் அப் பணியிடங்களை பணி நிரவலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இதற்கான திருத்தங்களை ஆணையர் அவர்கள் வெளியிட வேண்டும் என்று ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Promotion கொடுத்தால்,
    Deployment செய்ய vacant,
    எங்கிருந்து வரும்?
    ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டு அரசாணை பிறபிக்கும்,
    இயக்குனர்கள் இப்போ
    டம்மி,
    இது அறிவார்ந்த ஆணையர்களின்,
    நிர்வாக காலம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி