Breaking : ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2022

Breaking : ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு!


பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி 10.01.2022 முதல் வட்டாரத் தலைமையிடத்தில் தெரிவு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ( Hi - Tech Lab ) நடைபெற்று வருகிறது . செய்யப்பட்ட இந்நிலையில் , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது.


எனவே , 03.02.2022 முதல் நடைபெற உள்ள கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Sariyana mental groups.... Oru plannum illa

    ReplyDelete
  2. state.la alwa kodukka oru aalu...
    central.la alwa kodukka oru aalu...
    romba kastam...
    inga dhiravidam...
    anga bharath maadha ki je...
    avlo dhan...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி