அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், கணினி வழி வினாடி வினா போட்டி நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 முடித்து, பல்வேறு நுழைவு தேர்வுகளில் பங்கேற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல கல்லுாரிகளில் உயர்கல்வியில் சேர, தேவையான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், தேர்வுக்கு தயாராவதற்கான வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதன்படி, இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி வழியில் வினாடி வினா போட்டி நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்கள் தொடர்பான ஆசிரியர்கள், இந்த வினாடி வினாவை நடத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.
தமிழக மாணவர்கள் எந்த விதமான போட்டி தேர்வு மற்றும் நுழைவு தேர்வையும் எதிர்கொள்ள, வினாடி வினா போன்றவற்றின் வழியே, அவர்களை தயார்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி