கோவிட் - 19 பெருந்தொற்று - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2022

கோவிட் - 19 பெருந்தொற்று - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


2022-2023 ஆம் கல்வியாண்டில் 2022 ஜீன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது . மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , மாணவர்களும் , ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பார்வை 2 - ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் வழிமுறைகளை அனைத்து தலைமையாசிரியர்களும் பின்பற்ற அறிவுறுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Covid 19 SOP -  Proceedings - Download here...

1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும் . எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap , Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் . உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை வகுப்பறைகளில் வேண்டும்.

6. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.


1 comment:

  1. தமிழ் 6 முதல் 10 வரை நீங்கள் நன்றாக படித்துள்ளீர்களா இந்த புத்தகத்தில் உங்களை சோதனை செய்து பாருங்கள் அனைத்து வினாக்களையும் ஒரே புத்தகத்தில் எடுத்து கொடுத்து உள்ளோம் contact 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி