கூகுள் மேப்ஸ் மூலம் சுங்கக் கட்டணத்தை அறியலாம்: எப்படி தெரியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

கூகுள் மேப்ஸ் மூலம் சுங்கக் கட்டணத்தை அறியலாம்: எப்படி தெரியுமா?

 

இப்போதெல்லாம் பலரும் பக்கத்துத் தெருவிலிருக்கும் கடையைக் கூட கூகுள் மேப்ஸ் மூலமாகத் தேடிக் கொண்டு போகும் அளவுக்கு நாம் அதற்கு அடிமையாகிவிட்டோம்.


வீடு எங்கே, அலுவலக முகவரி என்ன? பஸ் ஸ்டாண்டுக்கு எப்படிப் போக வேண்டும்? அந்தக் கடை எங்க ஏரியாவில் எங்கே இருக்கு? இதுபோன்ற கேள்விகளையெல்லாம் இப்போது யாரும் யாரிடமும் கேட்பதில்லை. ஏனென்றால் கையிலிருக்கும் செல்லிடப்பேசிதான் காரணம். அதனிடம் கேட்டால் சொல்லிவிடும் என்ற எண்ணமே காரணம்.


அப்படிப்பட்ட கூகுள் மேப்ஸ், தொடர்ந்து பல வசதிகளை அதிகரித்துக் கொண்டே, தனது சேவையை மேம்படுத்திக் கொண்டே வருகிறது என்பதும் உண்மைதான்.


அந்த வகையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது எந்த வழியில் பயணிப்பது, எவ்வளவு தொலைவு, பயண நேரம் உள்ளிட்டவற்றை தெரியப்படுத்திக் கொண்டிருந்த கூகுள் மேப்ஸ், இனி வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எத்தனை, அதற்கான மொத்த கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதையும் தெரிவிக்கும்.


இதனை எவ்வாறு அறிந்து கொள்வது?

கூகுள் மேப்ஸ் செயலியை உங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


நீங்கள் இருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய ஊரையும் சரியாகப் பதிவிடுங்கள். அனைத்துத் தகவல்களுடன், அங்கிருக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டணம் ஆகியவையும் அதில் தெரிவிக்கும் வகையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.


சுங்கக் கட்டணத்தைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைவதாக இருந்தால் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் காத்திருக்கிறது. அதுதான். சுங்கச் சாவடி இல்லாத சாலைகள். அதாவது, சுங்கச் சாவடி இல்லாத சாலைகள் அல்லது சுங்கச் சாவடி இருக்கும் சாலைகள் என்ற வாய்ப்பில் ஒன்றை தேர்வு செய்தும் நீங்கள் பாதையைத் தேடலாம். உங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்த விருப்பமில்லை என்றால், சுங்கச் சாவடி இல்லாத பாதையைத் தேர்வு செய்து பயணிக்கலாம். அதற்கு அவாய்ட் டோல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி