பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வியாண்டில் 8 ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 20 பேர் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகைக்கான தேர்வினை ( NMMS EXAM ) கடந்த 05.3.2022 அன்று எழுதினார்கள்.
NMMS EXAM முடிவுகள் 27.6.2022 தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இப்பள்ளியின் மூன்று மாணவியர்கள் அதிக மதிப்பெண் ( 180 க்கு 155 , 153,144 ) பெற்று மாநில அளவில் முதல் , இரண்டு மற்றும் நான்காம் இடங்களை பெற்றுள்ளார்கள்.
இந்த 20 மாணவர்களும் மாதந்தோறும் ரூ. 1000 / - வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அரசின் உதவித்தொகை பெறுவார்கள். வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி