பான் காா்டு-ஆதாா் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2022

பான் காா்டு-ஆதாா் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்

 

பான் காா்டு-ஆதாா் எண் இணைப்புக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.


இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதாா் காா்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், ஒருவா் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் காா்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓா் ஆதாா் அட்டை மட்டுமே பெற முடியும். எனவே, பான் காா்டு - ஆதாா் எண் இணைப்பு மூலம் போலி பான் காா்டுகள் முடக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் போலியான பான் காா்டுகள் ஒழிக்கப்பட்டன. பான்-ஆதாா் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மாா்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி