பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2022

பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு

 

பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பி.இ., கலைக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 27 ஆக நீடித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அம்மாணவர்களும், என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பி.இ., பிடெக்கின் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி