தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

 

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால், ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், முதற்கட்டமாக, 13 ஆயிரத்து 331 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உள்ளது. அதேநேரம், உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் எல்லை யாக குறிப்பிடப்படும், 22 மாவட்டங்களில் மட்டும், தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 


மாவட்ட கல்வி அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்களை அளிக்க, பட்டதாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.சென்னை உயர் நீதிமன்றத்தில், தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது, நியமனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி