சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% இன்று வரை அறிவிப்புகள் இல்லை?????? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2022

சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% இன்று வரை அறிவிப்புகள் இல்லை??????

சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்வி படித்தவர்களுக்கு 2017 ல்  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 2019 ல் 80% ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.


தமிழ் இட ஒதுக்கீடுகளில் (ஓவியம், தையல்) வழக்குகள் இருந்ததால் கால தாமதம் ஆனது,


,தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாததால் விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ் முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே , தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு விரைவில்  பணி நியமன ஆணை வழங்குமாறு சிறப்பாசிரியர்கள் (ஓவியம், தையல்) தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

1 comment:

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 23.10. 2021 அன்று
    சிறப்பாசிரியர் பணிக்காக சான்றிதழ் சரிபார்ப்பு TRB வளாகத்தில் நடைபெற்றது. இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. தயவுசெய்து பணி ஆணையை விரைந்து வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி