5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2022

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன.


இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கு 624 இடங்கள் உள்ளன. இவை நடப்பாண்டு இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 12-ல் தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற்றது.


விண்ணப்பித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த விவரங்களை http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.


இதையடுத்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஆக. 8) முதல்வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வரும் 13-ம் தேதி வழங்கப்படும். அவ்வாறு ஆணை பெற்றவர்கள், தேர்வுசெய்த படிப்புகளில் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி