கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் தொடா்பாக விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக அனுப்பலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. கூட்டுறவுத் துறையின் சாா்பில் அத்தகைய அதிகாரபூா்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
எனவே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி அறிவிப்புகளைப் பாா்த்து மக்கள் ஏமாற வேண்டாம். பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி