தமிழகத்தில் புதிய யானைகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2022

தமிழகத்தில் புதிய யானைகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அகஸ்தியர் மலையில் உள்ள 1197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகளுக்கான பிரத்யேக காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது.


அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருந்தது. 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் படி 2,761 யானைகள் இருப்பது அகத்தியர் மலையில் இருப்பது தெரியவந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அகத்தியர் மலை தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளிலும், கேராளாவின் கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இதன் அடிப்படியில் சட்டப்பேரவை அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்ற வலிறுத்தப்பட்டது.  இந்நிலையில், தற்போது அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அகஸ்தியர் மலையில் உள்ள 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி