TNPSC - தொழில் ஆலோசகர் பணிக்கு ஆக.26-க்குள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2022

TNPSC - தொழில் ஆலோசகர் பணிக்கு ஆக.26-க்குள் விண்ணப்பிக்கலாம்!

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 காலியிடங்கள் உள்ளன.


இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால்,விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம்பெற்றிருக்க வேண்டும்.


கணினி வழித் தேர்வு


சமூக அலுவலர் பதவிக்கு நவம்பர் 12-ம் தேதி காலை மற்றும் பிற்பகலிலும், தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13-ம் தேதி பிற்பகலிலும் கணினி வழித் தேர்வுகள் நடைபெறும்.


விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை திருத்தம் செய்துகொள்ள ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி