தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2022

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!


தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த அந்தோ ணிசாமி , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் , சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன் . பல ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை . இவற்றை வழங் கும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு மனு அனுப்பி னேன் . எனது கோரிக்கையை சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார் . 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி , உரிய பலன்களை மறுத்துள்ளனர் . இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது . 

அதன் படி கல்வி அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து , எனக் கான ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார் . 

முடிவில் , மனுதாரருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க மறுத்த மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . 

மனுதாரருக்கு கடந்த 2012 - ம் ஆண்டில் இருந்து உரிய பலன்களை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார் .

2 comments:

  1. https://tamilmoozi.blogspot.com/2022/09/happy-teachers-day-in-tamil.html

    ReplyDelete
  2. பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி