தமிழ்நாடு254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2022

தமிழ்நாடு254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதி

 

தமிழக பள்ளிக் கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன.


இதற்கிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியா் பணியிடங்கள் கோரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலா்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன.


பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட 254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை மீண்டும் தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவாகியுள்ளது.


நடப்பு கல்வியாண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 முதுநிலைபட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம், தருமபுரி
    PG TRB-தமிழ் & கல்வியியல் (Education)
    நேரடி வகுப்புகள் தொடக்கம் - மே மாதம் 2023,
    Study materials available
    Contact: 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி