School Morning Prayer Activities - 24.11.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2022

School Morning Prayer Activities - 24.11.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.11.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு

குறள் : 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தம்முடைய பிள்ளைகளின் சிறு கைகளால் பிசையப்பெற்ற உணவு பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.


பழமொழி :
Feed by measure and defy the physician.
அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :

நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். --லியோனார்டோ டா வின்சி.


பொது அறிவு :

1. புனித நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது? 

ஜெருசலேம் .

 2. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ? 

அரேபியா.


English words & meanings :

be-ar - a large wild animal, கரடி, noun. be-ar- support, கஷ்டத்தை தாங்குதல், மனதைரியம் கூறுதல். verb. வினைச் சொல். both homonyms


ஆரோக்ய வாழ்வு :

அதிக தீவிரம், சோர்வு தரும் வேலை வாய்ப்புகள் உள்ள இளைஞர்கள், நாள் முழுவதும் சுமார் 20 பாதாம் பருப்புக chளை சாப்பிடுவது, வேகவைத்த உணவுகளான கிழங்குகள் அல்லது பிஸ்கட்களுக்கு பதிலாக, அதன் தாது உள்ளடக்கத்தின் உதவியுடன் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை பெற முடியும். எலும்பு அடர்த்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் தசை வலிமையை மேம்படுத்த தாதுக்கள் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கும் பாதாம் பெரிய நன்மை பயக்கும்


NMMS Q

மிகத் துல்லியத் தன்மை கொண்ட கடிகாரம் எது? 
\\
விடை : அணுக்கடிகாரம்


நவம்பர் 24 இன்று


அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்



சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 
1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.
2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].
மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]
2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.


நீதிக்கதை

இட்லியைத் துரத்திய பாட்டி

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும். இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும். பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லோருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், இட்லிக்கு தருகிற காசு கூட இரண்டாம்பட்சம்தான். அவர்கள் பாராட்டுவது பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். 

ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் வைக்கும்போது ஒரு இட்லி மட்டும் கீழே விழுந்து உருண்டு ஓட ஆரம்பித்தது. ஏய், நில்லு, நில்லு என்று கத்திக்கொண்டு இட்லியைத் துரத்தினார் பாட்டி. அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார். பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார். 

அங்கு, சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? ஆமா, பார்த்தேன் என்றார் முதல் கடவுள், ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே. அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா. 

நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி. மீண்டும், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் பாட்டி, இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?

ஆமா, பார்த்தேன் என்றார் இரண்டாவது கடவுள். ஆனா, நீ அங்கு போகாதே, அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா. சொல்வதை கேட்காமல் தொடர்ந்து நடந்தார் பாட்டி. 

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? என்றார் பாட்டி. ஆமா, பார்த்தேன் என்றார் மூன்றாவது கடவுள். நீ சீக்கிரமா எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ. ஏன்? இதோ, அரக்கி வர்றா. இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். 

சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, மனுஷ வாசனை அடிக்குதே என்றாள். 

அதெல்லாம் இல்லை நீ கிளம்பு! என்றார் கடவுள். கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது என்றபடி, பாட்டியைப் பார்த்துவிட்டாள். பாட்டியிடம், உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் என்றாள் அரக்கி. என்னோட சமையல்காரியாக வைத்துக்கொள்ள போகிறேன் வா! என்று அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது. 

இந்தச் சின்ன ஆற்றைக் கடப்பதற்குப் படகு எதுக்கு? நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா? அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது என்றாள் அரக்கி. 

சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள். இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும் என்றாள் அரக்கி. சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசி வேண்டும் என்றார். 

இதோ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்து இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம் முழுக்க நிறைஞ்சுடும் என்றாள் அரக்கி. 

பாட்டி ஆச்சரியத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். அந்தப் பாத்திரம் முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள். 

சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன்னுடன் எடுத்துக்கொண்டார். அவர் ஆற்றை கடக்கும் நேரத்தில் அரக்கிகள் வந்துவிட்டனர். பாட்டி பயந்தார். ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அரக்கிகள் சட்டென்று குனிந்து சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது. 

அரக்கிகள் கோபத்தோடு பாட்டியிடம் வந்தனர். பாட்டி ஓடத்தொடங்கினார். சேற்றில் பாட்டியின் கால் சிக்கி தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு வந்தது. அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது. 

சட்டென்று பாட்டி படகில் ஏறி தப்பித்து தன் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது. பாட்டியைப் பார்த்தவர்கள் இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் என்றார்கள். 

இதோ, வந்துட்டேன் என்றார் பாட்டி. இனிமே உங்களுக்கு மட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன் என்றார். தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டு இட்லி சமைத்தார். 

அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். 

நீதி :
உதவும் எண்ணம் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள் - 24.11.22

* 5 மாவட்டங்களில் செயற்கை அருவிகள் உள்ள ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

* பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

* மைசூரு ஆய்வகத்தில் இருந்து முதல்கட்டமாக 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் கடந்த வாரம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

* புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி விண்ணில் ஏவப்படும்.

* சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

* 2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு - லான்செட் ஆய்வில் தகவல்.

* அமெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

* துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு.

* 2024-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் முறையில் மாற்றம்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: எம்.ஆர்.சி. அணி வெற்றி.

* உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* HC orders the sealing of resorts with artificial waterfalls in 5 districts

 * Minister M. Subramanian said that 2000 doctors have registered to participate in the International Medical Conference being held on the occasion of the centenary of the Department of Public Health.

* The Tamil Nadu government has issued an order to provide Rs.1000 each to the rain-affected families in the Mayiladuthurai district.  The government has allocated a fund of Rs.16 crore for this purpose.

 * In the first phase, 13,000 Tamil inscription steps were brought to Tamil Nadu from the Mysore laboratory last week.

 * The EOS-06 (Ozonesat-03) Earth observation satellite was designed by the Indian Space Research Organization (ISRO).  The satellite was launched by a PSLV C-54 rocket from the launch pad at Sriharikota on Nov.  It will be found on the 26th.

*  International tourism campaign 'Dramatic India' has been re-launched to promote international tourism.

 * 6.8 lakh people died from 5 types of bacteria in India in 2019 - Lancet study reports.

 * A state of emergency has been declared in New York, USA due to record snowfall.

*  The terrible earthquake in Turkey - 6.1 on the Richter scale.

 * Changes will be applied in the 2024 World Cup cricket format.

 * First Division Hockey League: MRC  Team wins.

 * World Cup Soccer: The match between Morocco-Croatia became a 'Draw'

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி