சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2022

சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம்

 ‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.


இத்தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை; அது விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.


‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.


நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.


அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி