TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நேரம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2022

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நேரம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு குரூப் 2 & 2A நடத்தப்பட்டது. 5,000 மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட இத்தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர்.

தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக தேர்வின் முடிவினை எதிர்பார்த்து வந்த தேர்வர்களுக்கு கடந்த மாதம் முடிவுகள் வெளியானது.

மேலும் தேர்வர்கள் அசல் கல்வித்தகுதி மற்றும் அடையாள சான்றிதழ்களை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அசல் சான்றிதழை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 16 இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி