ஆசிரியர் தகுதித் தேர்வு: போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு: போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது

 

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் நியமன மறு தேர்வுக்கான 149 அரசாணை ரத்து செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தொடர் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, அங்கு  காவல்துறை குவிக்கப்பட்டனர்.


காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்புறப்படுத்த  எதிர்ப்பு தெரிவிப்பதால் காவல்துறை குண்டுகட்டாக தூக்கி கைது செய்கின்றனர். போரட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


அரசாணை 149 – ஐ ரத்து செய்து வேண்டும், பணி நியமன வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி