பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார்!
தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்பதை தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு உறுதுணை புரியும் வகையில் , கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் ( Assessment cell ) , முன்னோட்டக் காட்சி அரங்கம் ( Preview theatre ) , 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் , மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் , மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இவற்றைத் திறந்து வைக்க இருக்கிறார்.
நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு . காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர் .
அன்பழகன் அவர்கள் கல்வித்துறைக்கு என்ன சாதித்தார் என்று ஒன்னும் புரிய வில்லை கல்வித் துறைக்கு சாதித்தவர் காமராஜர் அவரைப்பற்றி எந்த இடத்திலும் அவர் பெயர் வைக்கப்படவில்லை ஆனால் ஒன்றும் செய்யாது அரசியல் கட்சியில் அமைச்சராக இருந்து திமுகவுக்கு பக்கபலமாக இருந்தவர் என்ற காரணத்திற்காகவே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தோன்றுகிறது.
ReplyDelete