IT முறைகேடு - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2023

IT முறைகேடு - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சஸ்பெண்ட்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன். இவருக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.


இப்படியான ஒரு விருதை பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் மீது வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.



இதுகுறித்து, 120 (B) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


விசாரணையில் அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், நேற்று அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், ராமச்சந்திரனை மதுரை அழைத்துச் சென்ற  சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர். 


இந்நிலையில், ஆசிரியர் ராமச்சந்திரனை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறவும் பரிந்துரை செய்து உள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி