School Morning Prayer Activities - 13.02.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2023

School Morning Prayer Activities - 13.02.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 13.02.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் : 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.


பழமொழி :
Health is happiness. 

ஆரோக்கியமே ஆனந்தம். 


இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :

தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்


பொது அறிவு :

1. உலோகங்களில் மிகவும் லேசானது எது? 

 லித்தியம்

 2. உலகில் அதிக பரப்பளவு உள்ள நகரம் எது? 

 லண்டன்.


English words & meanings :

ant that keeps account - account-ant. Accountant


ஆரோக்ய வாழ்வு :

பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.


NMMS Q

உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைக் கொண்டுள்ள நுண்ணுயிரிகள் எது? 

விடை: வைரஸ்கள்


பிப்ரவரி 13 இன்று

உலக வானொலி நாள்



உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்



சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

நரியின் தேடுதல்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஒரே குஷி... நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்! என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்.... சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான். சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா? என்று ஏங்கி வாடுகின்றனர். காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்.


இன்றைய செய்திகள் - 13.02.2023

* புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி.

* இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: மாநில திட்டக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரை.

* மீண்டும் செயல்பட உள்ள புதுச்சேரி துறைமுகம் - சிறிய ரக கார்கோ கப்பல் மூலம் வெள்ளோட்டம்.

* இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

* அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாபெரும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்தில் மட்டும் 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து.

* மகளிர் டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி.

* ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.

* கிளப் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணி  சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines

* Pudukottai District Polpanaikottai Excavation Granted by the Central Government - Archaeologists are happy.

* Tamil Nadu Govt to continue Illam thedi kalvi Scheme  Recommended in State Planning Commission's Evaluation Report.

* Puducherry Port to be reactivated - pilot study will be done by small cargo ship.

* India will overtake China in terms of population in 2 months, UN expert panel has said.

* A massive war has been waged against child marriage in Assam.  4,135 cases were registered in just one week.  2,763 people have been arrested.

 * Any attempt by India to stop Russia-Ukraine war would be welcomed: US National Security Council opinion.

* Women's T20 World Cup: Australia beat New Zealand

* Indian athlete Tajinderpal Singh Dhoor has won the gold medal in the Asian Athletics Championships.

* Spain's Real Madrid won the Club Football World Cup final.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி