யார் யாருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2023

யார் யாருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

 

தமிழ் நாடு அரசால் வழங்கப்படவுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.


மகளிர் உரிமைத்தொகை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  “மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தை தர விரும்புகிறேன், தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதுதேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் வலிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறதுசமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார்.


நீதிக்கட்சி முதலே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 7000 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள் என கூறினார்.


மேலும், உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது என்றும், இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம் என்றும், பெண்களின் வங்கி கணக்கிற்கே மகளிர் உரிமைதொகை செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


மேலும், மீனவ பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டிடப் பணியாளர்கள் , சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் என பலர் பயனடைவர் எனவும் கூறினார்.

3 comments:

  1. Iyya welcome your help home work no job women help pannuga my mother errukaga avanga land my home work mattum செய்வாங்க அன மி father brothers no help amma only work no good food no income no care sons brothers girl me health issue please help my mother please other depan panni amma kasta paduthu

    ReplyDelete
  2. 50 Above age all womens கொடுக help pa errukum do not help and care sons husband

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் நிதி அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்த சிறப்பான விசயம், தற்காலிக ஊழியர்கள் பெறக்கூடிய சம்பளம் ஓரளவு நல்ல சம்பளம் என்று இருக்க வேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் அறிவித்தார். கடந்த ஆட்சியில் அடிமாட்டு விலை என்று சொல்லக்கூடிய குறைந்த பட்ச சம்பளம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு சிறப்பான அறிவிப்பு. இன்னும் தொகுப்பு ஊதியம் என்பதை ஒழித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி