தொலைதூரக் கல்வி சேர்க்கை மார்ச் 27 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 24, 2023

தொலைதூரக் கல்வி சேர்க்கை மார்ச் 27 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

இக்னோ பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல சீனியர் இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலை தூரக் கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.


மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2023 ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (சான்றிதழ் படிப்பு மற்றும் செமஸ்டர் முறையிலான படிப்புகளுக்கு இது பொருந்தாது.) தொலை தூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இக்னோ பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) விரிவாக அறிந்து கொள்ளலாம்.


மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி