தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2023

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க கோரிக்கை!!!

 


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு அகவிலைப்படி உயர்வை பின்பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு 38% விழுக்காட்டில் இருந்து 42% விழுக்காடாக  வழங்க ஒப்புதல் அளித்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் எனக் கூறியதோடு மத்திய அரசை பின்பற்றி  தமிழ்நாடு அரசும் அதே ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


ஏற்கனவே மூன்று முறை 6 மாதங்கள் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை போன்று வழங்காமல் ஜனவரி மாதம் முன் தேதியிட்டு  வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. முதல்வர்,கல்வி அமைச்சர் அவர்களுக்கும் நண்பகல் வணக்கம் முதல்வரே ஒன்று நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்து அரசு ஆணை வழங்க வேண்டும் இல்லை என்றாள் ஊதியம் உயர்வு செய்ய வேண்டும்"தெய்வங்கள்" இருக்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி