தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2023

தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள்

 

வரும் கல்வி ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகத் தலைவர் ஐ லியோனி தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதால் கூடுதலாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் முதலே வரும் கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு தடையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை 25 புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை மாணவர்களுக்கான புத்தகங்களில் 5 புத்தகங்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மேலும் 13 புத்தகங்கள் மொழிமாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி