மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. - பள்ளிக்கல்வி கமிஷனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2023

மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. - பள்ளிக்கல்வி கமிஷனர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 'ஆப்சென்ட்' இல்லாமல், அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.


இதில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறை, தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பொதுத் தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் முயற்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.


பிளஸ் 1 பொதுத் தேர்வை அடுத்த ஆண்டில் தொடர்வது குறித்து, சி.இ.ஓ.,க்களின் கருத்துகளை தனியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.


கூட்டத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேசியதாவது:


பள்ளிக் கல்வித் துறைக்காக, தமிழக அரசு அறிவித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை செயல்படுத்தி விட்டோம். மீதமுள்ள திட்டங்களையும், மாணவர்களுக்கு பயனுள்ள முறையில், அமல்படுத்த வேண்டும்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, அனைத்து மாணவர்களும், ஆப்சென்ட் இல்லாமல், தேர்வில் பங்கேற்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு, அமைச்சர் பேசியதாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையில், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், சி.இ.ஓ.,க்கள் மத்தியில் பேசுகையில், ''பல மாவட்ட கல்வி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இடைநிற்றலான மாணவர்களின் முகவரிகளை தந்துள்ளோம். அவர்களை கண்டறிந்து, தேர்வில் பங்கேற்க வைக்க உங்களால் முடியவில்லை,'' என்றார்.

1 comment:

  1. பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுடைய முகவரி தங்களால் எப்படி கொடுக்க இயலும் அவற்றை பதிவற்றும் செய்தது ஆசிரியர்கள் தான் அதை மீண்டும் எங்களுக்கே வழங்கு புத்திசாலித்தனமான கல்வித்துறை ஆணையர் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு கல்வியின் மீது நாட்டம் இல்லாத நிலையை கல்வித் துறை உருவாக்கி வருகிறது என்றுதான் அர்த்தம். அதை தவிர்த்து மாணவர்கள் ஏன் வரவில்லை என்று எங்களிடமே கேள்வி எழுப்புவது விசித்திரமாக உள்ளது. அதிகப்படியான பாடத்திட்டம் கொரோனா போன்றவை தான் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரித்ததற்கான காரணம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி