குஜராத் : 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2023

குஜராத் : 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

 

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 


ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் 27 ஆயிரத்து 446 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. 


சூரத் மாவட்ட மாணவர்கள் 76 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த நிலையில் 157 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர் எவரும் தேர்ச்சி பெறவில்லை. குறிப்பாக குஜராத்தி பாடத்தில் 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் மாணவர்கள் அடிப்படை கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளனர். 


மாநிலத்தில் 1084 பள்ளிகள் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி