பிஎட், எம்எட் படிப்பு: ஜூன் 2-வது வாரத்தில் இறுதி பருவத்தேர்வுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2023

பிஎட், எம்எட் படிப்பு: ஜூன் 2-வது வாரத்தில் இறுதி பருவத்தேர்வுகள்

 

பிஎட், எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.சி.நாகசுப்பிரமணி அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் மே 11-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைகின்றன. மே 12 முதல் பருவ விடுமுறை விடப்படுகிறது.

4-வது பருவத்துக்கான (இறுதிபருவம்) எழுத்துத் தேர்வுகளை ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி பருவத் தேர்வுக்கான விரிவானகால அட்டவணை பல்கலைக்கழக தேர்வுத் துறையால் விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி