கல்லூரிகளில் மாணவர் குறைதீர் மையங்கள் அமைக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ்குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு யுஜிசி சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதில், மாணவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய குழுவை அமைக்க வேண்டும். மாணவர்கள் குறைகளைதெரிவிக்கும் வகையில், கல்வி நிறுவனம் சாராத ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இந்தக் குழு மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் இடையிலான பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பிரத்யேக குழு... இதற்கிடையே, தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் கடமை. எனவே, யுஜிசி வகுத்துள்ள வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்றி, கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, உடனடியாக பிரத்யேக குழுவை அமைக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி