அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2023

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

 

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


அசாம் மாநிலத்தில் ஆசிரியர்கள் சிலர் சில நேரங்களில் பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும் ஆடைகளை அணிவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநில கல்வித்துறை, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதன்படி ஆசிரியர்கள் சாதாரண வண்ணங்களில் ஆளான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், பளபளப்பான மற்றும் பார்ட்டி ஆடைகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்கள் முறையான உடையை மட்டுமே அணிய வேண்டும், சட்டை-பேன்ட் அங்கீகரிக்கப்பட்ட ஆடையாக இருக்கும். 


பெண் ஆசிரியர்கள் முறையான சல்வார் சூட், சேலை, உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும், அதேசமயம் டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. மேலும் அரசின் இந்த ஆடை கட்டுப்பாடை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி