23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்:
*பள்ளி செல்லா குழந்தைகளை PARENT TNSED APP மூலமாக தெரிந்து கொண்டு, அந்த மாணவர்களை சேர்க்க அவர்களின் பெற்றோர் மற்றும் அந்த மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்க்க வேண்டும்
*10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து அந்த மாணவர்களின் படிப்பை தொடரவும், அல்லது ITI போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த படிப்பை அரசு தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்
*சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு விருது வருகின்ற சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை SMC உறுப்பினர்களிடம் தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டை ஊக்கவிக்கவேண்டும்
*5,8,10 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவேண்டும்
*10,11,12 போன்ற வகுப்புகளை சேர்ந்த துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்
*பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்களா? என்பதை உறுதி செய்தல்; சேராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல்
*நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், மறுதேர்விற்கு விண்ணப்பித்த தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர்க்கல்விக்கு செல்லாத மாணவர்கள் விவரங்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தல்
*1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருவதை உறுதி செய்தல்
*மேலும் பள்ளியின் தேவை சேர்ந்து திட்டமிடுதல்
*முந்தைய தீர்மானத்தின் தற்போதைய நிலை பற்றி விவரித்தல்
*பள்ளியின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை விவாதித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் எடுத்து நிறைவேற்றுதல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி