ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2023

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு.

 

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு.


அரசாணை எண். 165 நாள்: 31 5 2023 ன் படி, ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் சிறப்பு ஓய்வூதியர் கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வாழ்வு சான்று (மஸ்டரிங்) வரும் 01.07. 2023 முதல் புதிய நடைமுறையை அரசு அமல்படுத்த உள்ளது.


இதுவரையில் 2022 ல், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மஸ்டரிங் செய்யப்பட்டது!

இனி வரும் காலங்களில் ஓய்வூதியர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் தங்கள் வாழ்நாள் சான்றினை பதிவு செய்து கொள்ளலாம்!.தவறினால் ஒரு மாதம் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.


 உதாரணமாக ஜூலை மாதம் ஓய்வு பெற்றிருந்தால் அவர் ஜூலை மாதத்தில் வாழ்நாள் சான்று பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதுவும் தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.


குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களுக்கு அந்த ஓய்வூதியம் எந்த மாதத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டதோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்று பதிவு செய்ய வேண்டும்!


வாழ்நாள் சான்றினை நேரடியாக கருவூலத்திலோ அல்லது அருகில் உள்ள தபால் நிலையத்தில் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.


குறிப்பு

2023 ஆம் ஆண்டு, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்ய வேண்டியவர்கள், ஜூலை மாதம் பதிவு செய்து கொள்ளலாம்!

மற்றவர்கள் அவரவர் ஓய்வு பெற்ற மாதங்களில் பதிவு செய்து கொள்ளலாம் 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி