அரசுப்பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்... பைக் பரிசளித்த முன்னாள் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2023

அரசுப்பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்... பைக் பரிசளித்த முன்னாள் மாணவர்கள்

 

திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர்.


1988 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது பணியில் சேர்ந்த ராமன், 2007 ஆம் ஆண்டு உயர்நிலையாகத் தரம் உயர்த்தப்பட்ட அந்த பள்ளியிலிருந்து நேற்றோடு பணி ஓய்வு பெற்றார்.


அதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தற்போது படித்துவரும் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தினர்..


ஆசிரியர் ராமன் கண்டிப்புடன் நடந்துகொண்டு அறிவுப்பாதையை காட்டியதால் தான் உயர்ந்த நிலையை அடைய முடிந்ததாக முன்னாள் மாணவர்கள் பள்ளி நாட்களை மேடையில் நினைவுகூர்ந்தனர். மாணவர்கள் பொழிந்த அன்பு மழையால் ஆசிரியர் ராமன் மேடையிலேயே கண்கலங்கினார்.


அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஹீரோ பேஷன் புரோ பைக்கையும் முன்னாள் மாணவர்கள் பரிசளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி