40,000 மாணவர்களுக்கு கிரெடாய் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2023

40,000 மாணவர்களுக்கு கிரெடாய் பயிற்சி

கட்டுமான துறையில் தொடர்ந்து, 40,000 இன்ஜி., மாணவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும் என, கிரெடாய் என்ற இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கட்டுமான துறையில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி, தொழில்முனைவோர் ஆவது குறித்து, கிரெடாய் சார்பில், முதற்கட்டமாக, 25 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.


அதில், கிரெடாய் நிர்வாகிகள் பேசுகையில், 'கிரெடாய் சார்பில், தொடர்ந்து இன்ஜி., மாணவர்கள் 40,000 பேருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.


நிகழ்ச்சியில், கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன், தொழில் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி