தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.inமற்றும் www.tn medicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று ஜூலை 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய உள்ளதால், விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 22,500, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 9,500 என மொத்தம் 32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி