பள்ளிகளில் உள்ள, 'கேன்டீன்'கள் உள்ளிட்டவற்றில் சிறுதானிய உணவுகள் பரிமாறுவது தொடர்பான அட்டவணையை தயாரித்து அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, இந்தாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவச மதிய உணவில் சிறுதானியங்களை சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் சிறுதானிய உணவுப் பொருட்களை விற்க வேண்டும். இது தொடர்பாக கால அட்டவணையை அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், பல மாநிலங்கள் இந்த அட்டவணையை அனுப்பவில்லை.
இதையடுத்து, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தக் கால அட்டவணையை தயாரித்து அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் நினைவூட்டல் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி