அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட களஆய்வு - செப் .1 முதல் 15 வரை நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2023

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட களஆய்வு - செப் .1 முதல் 15 வரை நடைபெறுகிறது

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கள ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1 முதல் 15 - ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது . தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க 1 முதல் 3 - ம் வகுப்புகளுக்கு எண்ணும் , எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அமல் படுத்தப்பட்டது.


 அதன்படி , 2025 - ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத , படிப்பதை உறுதி செய்யும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் 5 - ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் , எண்ணும் எழுத் தும் திட்டம் 1 முதல் 3 - ம் வகுப்பு மாணவர்களிடம் எந்தளவு சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பி.எட் . பயிலும் மாணவர்கள் 3 - ம் நபர் மதிப்பீட்டாளர்களாக நியமிக்கப் பட உள்ளனர். 


இதுகுறித்து பி.எட் . மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28 ( நாளை ) முதல் 31 - ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது . அதன்பின் , அவர்கள் மூலம் பள்ளிகளில் கள் ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1 முதல் 15 - ம் தேதி வரை நடத்தப் படும் . இந்த பணியில் பிஎட் மாணவர் களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி உயர்கல்வித் துறைக்கு , பள்ளிக்கல்வி இயக்கு நரகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது . மறுபுறம் இந்த கள ஆய்வுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

1 comment:

  1. தயவுசெய்து ஆசிரியர் சமுதாயத்தை அசிங்கப்படுத்தாதீர்கள் இழிவுபடுத்தாதீர்கள்...

    ஆசிரியர் பணி என்பது சமுதாய பணி சமூக சேவை பணி இப்படி ஆசிரியர்களை கேவலப்படுத்த வேண்டாம்

    ஆசிரியர் நியமனத்திற்கும் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்

    புதுப்புது திட்டங்களையும் கற்பித்தல் முறைகளையும் புகுத்தி மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி