20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2023

20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு

 

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் உள்பட நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்தது.


இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கா்நாடகம், மகாராஷ்டிரம், கேரளத்தில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறுகையில், ‘யுஜிசி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பல பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவது யுஜிசியின் கவனத்துக்கு வந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது. அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தவொரு பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி