குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் சேதுசெல்வம் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிய மனுவில் சேதுசெல்வம் கூறியிருப்பதாவது:
குறுவள மையம்மூலம் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு மாநில, மாவட்ட அளவில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வரையிலான காலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல் பாதிக்கப்படுகிறது.
இப்பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களை ஈடுபட செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி