மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2023

மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை

 

தூத்துக்குடி: மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை!


நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியராக தான் நியமனம் செய்யப்பட்டதாகவும், இந்த நியமனத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி தாமதமாக நியமன ஆணை வழங்கியதாகவும், எனவே தனது பணியை வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி, ஜான்சிராணி என்பவர் கடந்த 2019-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜான்சிராணிக்கு பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜான்சிராணி சார்பில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மாவட்ட கல்வி அதிகாரியின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

2 comments:

  1. Happy news for TET passed candidates. decided new waitage system follow below 2 things for new posting . 1.Year of passed ,
    2.Age of the candidate .

    So, 2013, 2017 all are equal. Post announced soon. By Thagadur Dhanapal , 962-633-4520.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி