தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2023

தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு.

2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல் · தற்காப்புக்கலைப் பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

SPD Proceedings - Download here

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் கீழ் 6941 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்தம் ரூ .1041,150 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 6267 உயர் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் . மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ .940.050 / -இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலைப்பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது . இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


மாவட்டங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது ( Elementary and Secondary )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி