தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2023

தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் ஏமாற்றம்

 

அரையாண்டு தேர்வுக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்த மாணவர்கள், திடீரென தேதி மாற்றப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.பள்ளிக்கல்வித்துறை, டிச., 7 மற்றும் 8 ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 


இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்தப்பட்டது.தொடர்ந்து, அரையாண்டுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், நேற்றுமுன்தினம், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வுகளை, 14 மற்றும் 20ம் தேதிகளில் மாற்றி, மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், தேர்வுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி